கடல் முன்னோடி - தமிழன்
மீனவன் ...
காற்று , மழை , புயல் , கொந்தளிப்பு , கோடை , குளிர் , பசி , பிணி , தூக்கம் என பல விடயங்களை ஒருங்கே சமாளிக்க கற்று கொண்டவன் நம் "மீனவன் " மட்டுமே ...
கழனிகளின் நாயகன் உழவன் என்றால் , கடலின் அரசன் மீனவனே ...
மீனவனின் வாழ்கை ...
நாமெல்லாம்
தொழில்நுட்ப வளர்ச்சியால் பெற்றுவிட்டோம் பல வாகனங்களை நம் அத்தியாவசிய
தேவைக்கும் ஆடம்பரத்திற்கும் ... ஆனால் மீனவனின் வாழ்க்கை இன்று வரை "கட்டு
மரத்துடன் " மட்டுமே காலம் கழிக்கிறது .
கொள்ளை அடிக்கும்
அரசாங்க ஊழியனுக்கு தெரியாது , மண்ணெண்ணையின் அருமை ... அராஜகம் செய்யும்
அரசியல் கட்சிக்கு புரியாது "டீசெல் " விலை ஏற்றத்தின் பாதிப்பு ...
கட்டு
மரமும் கிழிந்து போன வலையுமே மீனவனின் நிரந்தர சொத்து ... நாமெல்லாம்
வெளியில் பயணம் மேற்கொள்ளும் போது நாம் மீண்டும் வீடு திரும்புவோம்
என்பதில் உள்ள பாதி உத்திரவாதம் கூட கிடையாது மீனவன் கடலுக்குள்
பயணிக்கும் போது
நம்பிக்கை , தைரியம் இந்த இரண்டை மட்டும் நம்பி கடலுக்குள் செல்லும் மீனவன் தன் அத்தனை இடர்களையும் தனித்தே சமாளிக்கிறான் .
கடலில்
அவன் தோணி ஆடுகையில் , மீனவன் வீட்டு பெண்களின் இதயம் கண்ணீர் என்னும்
கடலில் தத்தளித்து கொண்டுதான் இருக்கிறது ... சென்ற கணவன் வீடு
திரும்பவேண்டும் என்று ஒவ்வொரு கனத்தையும் நெஞ்சில் கனமாக தாங்கி காலம்
கழிக்கும் மீனவ பெண்கள் வாழ்க்கையை கடவுளாலும் வாழ முடியாது .
உப்பு காற்றும் , நீரும் அவன் உடலோடு ஒன்றி போன ஒரு விசயம். மீனவனையும் , உப்பையும் பிரிப்பது என்பது இயலாத காரியம் .
ஆடும் தோணியில் பயம் அற்று நின்று பயணத்தை தொடங்கும் மீனவன் கரை முதலே இடர்களை சந்திக்கிறான் .
ஆரவாரம் இல்லாத கடலில் அசுரத்தனமாய் அடித்து அழிக்கும் "சுழி காற்று " ,
சமுத்திரத்தை குடித்து தாகத்தை தீர்க்க நினைக்கும் "சுறா மீன் " ,
அடித்து அழவைக்கும் "பேய்மழை ",
பிரளயம் போல் "கடும் கொந்தளிப்பு "
கண்னுக்கு எட்டிய வரை நீர் இருபினும் "தாகத்தை " தீர்க்க முடியாது கொடுமை ,
வதைக்கும் சூரியன் மறைந்தபின் வாட்டும் "கடும் குளிர்",
போராடும் தேகத்துக்கு போதுமான "சத்தான உணவு ",
தனித்து விடப்பட்ட மைதானத்தில் சித்திரகுப்தனிடம் போடும் கணக்கு சண்டை "பிணி ",
குறித்த நேரத்தில் கரை திரும்ப வேண்டி தியாகம் செய்யும் "தூக்கம்"...
இத்தனையும் எதிர்கொண்டு மீனவன் போராடி கரை சேரும் போது தான் , உண்மையில் அவன் சவால்களை சந்திக்கிறான் ...
அல்லும்
பகலும் அளவில்லாமல் அயராது உழைத்த அவனுக்கும, அவன் மீன்களுக்கும் எவனோ
ஒருவன் சம்பந்தம் இல்லாதவன் விலை பேசுகிறான் இடை தரகு செய்கிறான் ...
அவனால்
கடின பட்டாவது "நில மக்களின் " வாழ்கையை வாழ்ந்து விட முடியும் , ஆனால்
நம்மால் ஒருகாலும் ஒரு கணம் கூட அவன் வேதனையான வாழ்கையை வாழ முடியாது ...
இத்தனை பெரும் புயலானது "மீனவனின் வாழ்க்கை "!!!
இன்றோ ...
நம் தமிழ் மீனவனின் நிலைமை சொல்லும் அளவுக்கு இல்லை ...
சுராவிடம் தப்பினாலும் ,
புயலிடம் போட்டி இட்டு வென்றாலும் ,
பசி , தூக்கம் , பிணி மறந்தாலும் ....
சிங்களவனிடம் தப்ப முடியாது ... அவன் எல்லை மீறி வந்து நம்மை நம் எல்லைக்குள் செய்யும் அட்டுழியம் "துபபாக்கி சூடு, தாக்குதல் "...
என்ன உரிமை இருக்கிறது ஒரு மனிதனின் உரிமையை எடுப்பதற்கு , எவர் எழுதி குடுத்தது அவனுக்கு உயிர் எடுக்கும் உயரிய பணியை சாசனமாக ...
இவை எல்லாம்
நிலத்தில் வாழும் சில இரண்டு கால் கழுதைகளும் , நரிகளும் , பூனைகளும்
செய்த அக்கரம வேலை ... அவன் மஞ்சனையில் "தூபம் " போடுவதற்காக , மீனவன்
வீட்டு "பசி நெருப்பை" கொள்ளை அடிக்கிறான் ....
கச்ச தீவை தாரை வார்த்த கயவர்களை எங்கே அவர்கள் சொத்தில் "ஒரு ரூபாயை " கடன் குடுக்க சொல்லுங்கள் பார்போம் ...
கண்மூடித்தமான
மனிதர்கள் இருக்கும் வரை கயவர்கள் ஒழிய போவது இல்லை , ஆம் பதவிக்கும் ,
பணத்திற்கும் வேஷம் கட்டும் கொடியவனை "அமைச்சன் " என்று வாக்களித்து
"கோட்டைக்கும் " , "ஜனநாயகம் மன்றத்துக்கும் " அனுப்பும் மக்கள் இருக்கும்
வரை கொள்ளையர்கள் நம் வயிற்று பசி என்னும் அடுப்பில் குளிர் காயத்தான்
செய்வார்கள் ...
ஒரு உயிரை பரிப்பவனை எதிர்த்து
மனிதாபிமானத்தை கேட்க சொன்னால் , "நட்பு நாடு " என்று வேஷம்
கட்டுகிறார்கள் உண்மை கொலைகாரர்கள் . அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
... இது , திருடனை வீட்டுக்குள் வைத்து கொண்டு ஊருக்கு வெளியில் இருப்பவனை குற்றம் சுமத்துவது நம் தவறே ...
ஜனநாயகத்தில்
என்ன பெற்றுவிட்டது இந்த மீனவ சமுதாயம் . குறைந்த பட்சம் இந்த ஜனநாயகம்
"உயிர் உத்திரவதமாவது " தந்து இருந்தால் பரவாயில்லை .
இதற்கு மன்னர் ஆட்சி மிக சிறந்தது ...!!! எம் சோழர்களும் பாண்டியர்களும் எங்கே , இந்த பேடி தனமான் நாய்கள் எங்கே ...
ஒவ்வொரு
வாக்குரிமை பெற்றவனும் இதனை சிந்திக்க வேண்டும் ... வரும் தேர்தல்
வாழ்கையை , தமிழன் தொலைத்த வாழ்க்கையை மீட்டு எடுக்க வழி பெற வேண்டும்
...!!!
---ராஜ் !