அண்ணாமலையாருக்கே அரோகராவா?
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் இன்று உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் சைவ தலமாகும். இத்தலம் பஞ்ச பூத தலதங்களில் அக்னி தலமாகவும் , ஆதார தலங்களில் மணிப்பூரக தலமாகவும் , முக்தி தலங்களில் "நினைத்தாலே முக்தி" தரும் தலமாகவும் விளங்குவதே இதன் சிறப்பு என்றாலும் , மேலும் மிக முக்கிய காரணம் இக்கற்றளி தன்னகத்தே நீண்ட நெடிய வரலாற்றை புதைத்து வைத்துள்ளதே ஆகும்.
சமீப காலமாக , அண்ணாமலையாரின் பெயருக்கு ஊரு விளைவிக்கும் வன்னமாக பல குழுக்கள் சுயலாபம் தேட பல கட்டுக்கதைகளை மக்களிடம் அவிழ்த்துவிட்டு முகம் சுளிக்கும் வன்னம் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இணையத்திலும் , சமூக வலைத்தளத்திலும் ஆதாரமற்ற கதை ஒன்று , திருவண்ணாமலை கோவிலின் பெரிய நந்தியை வைத்து உலாவியது. அது அடங்கிய சில நாட்களிலே , அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவர் "இடைக்காட்டு" சித்தர் சமாதி மீது அமைந்து உள்ளது என்று அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
நாளுக்கு நாள் இதுபோன்று பல தவறான செய்திகள் பல உலா வருவதால் , மனமாற அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்கள் அறியாமையின் பால் பலி ஆகியதன் விளைவே , இன்று கிரிவல பாதை முழுவதும் புது புது ஆசிரமங்களும் , ஆக்கிரமிப்புகளும் முளைக்க காரணம். இருபது வருடங்கள் முன்னர் இருந்த எழில் கொஞ்சும் கிரிவல பாதைக்கும் இன்று இருக்கும் பாதைக்கும் பல மாற்றங்கள். இன்று திருவண்ணாமைலையை சேர்ந்த ஒரு நபர் வெளியூரில் சென்று ஊர் பெயரை சொன்னால் மக்கள் முதலில் விசாரிப்பது அண்ணாமலையாரை பற்றி அல்ல , மாறாக "உங்கள் ஊரில் நிறைய சித்தர்கள் இருக்கிறார்களாமே " என்பது தான். நாளுக்கு நாள் அண்ணாமலையாரின் பெயர் மெல்லமாக தேய்ந்து , திருவண்ணாமலையின் அடையாளமாக இந்த கிரிவல பாதை சித்தர்கள் உரு எடுத்து வருன்றனர்.
அண்ணாமலையார் கோவிலின் தோற்றம் :
உலக பிரசத்தி பெற்ற இக்கோயில் கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் இயங்கி வருவதற்கு நமக்கு இலக்கிய சான்றுகள் கிடைத்தாலும் , அண்ணாமலையார் கோவிலில் பதிவாகியுள்ள முதல் கல்வெட்டு சான்றாக கி .பி 885 ஆம் வருடத்திய கல்வெட்டே ஆகும். இது முதலாம் ஆதித்தனின் பதினான்காம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு. இதன் பின்னர் வந்த பராந்தக சோழர் , கன்னர தேவர் , ராஜ ராஜ சோழரின் அண்ணன் ஆதித்ய கரிகாலன் என்று வரிசையாக ஆண்ட சோழ மற்றும் ஹொய்சாள , பாண்டிய , விஜயநகர , நாயக்கர் காலத்திய ஏராளமான கல்வெட்டுகள் அடங்கி மிக பெரிய தகவல் களஞ்சியமாக இக்கோயில் விளங்குகிறது. தமிழ் மற்றும் அல்லாது தெுலுங்கு கல்வெட்டுக்களும் ஏராளம்.
இலக்கிய சான்றாக நமக்கு கிடைப்பவை திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் காலத்தில் பாட பெற்ற பதிகங்கள் தான் . கோவில் ஏழாம் நூற்றாண்டிலே இருந்தமையை உறுதி படுத்த இப்பதிகங்களே துணை.
மூலவர் அண்ணாமலையாரே :
சீர்காழி பதி தோன்றிய திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். இவர்கள் பல தலங்களில் உள்ள இறைனை தரிசித்து பதிகங்களாக பாடியுள்ளனர். சேக்கிழார் அவர்கள் இவற்றை எல்லாம் திருமுறைகளாக தொகுத்து உள்ளார். அதில் முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்மந்தர் பாடல்களும் , அடுத்த மூன்று அப்பர் பாடல்கள் என்று வரிசைபடுத்தியுள்ளார்.
முதலாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் அவர்கள் திருவண்ணாமலை வந்தடைந்து இங்கே வீற்றிருக்கும் ஈசனை பின்வருமாறு பாடுகிறார்.
"உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே"
இது மட்டும் அல்லாது அவர் பாடிய 20 பாடல்களிலும் "அண்ணாமலை" என்றே குறிப்பிடுகிறார். இதன் மூலம் சம்பந்தர் காலத்திலே இறைவனை அவர் "அண்ணாமலையார்" என்று குறிப்பிடுவது மிக தெளிவாக பதிவாகியுள்ளது.
இதை போல அப்பர் பெருமானும் , தனது பதிகங்களில் இத்தல இறைவனை "அண்ணாமலை" என்றே பதிவு செய்து உள்ளார்.
ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.
இவறுக்கு பின்னால் வந்த மாணிக்கவாசக பெருமானும் திருவண்ணாமலையில் திருவம்மானையும் திருவெம்பாவையும் அருளி செய்து , தனது "போற்றி திரு அகவலில் " இத் தலத்து உறையும் இறைவனை அண்ணாமலை என்றே பதிவு செய்து இருக்கிறார்.
அண்ணா மலையெம் அண்ணா போற்றி
இப்படி அண்ணாமலையார் என்ற பெயர் ஏழாம் நூற்றாண்டு முதலே வழங்கப்பட்டு இன்றுவரை வழக்கில் இருந்து வருகிறது.
பள்ளிப்படை :
பள்ளிப்படை என்பது வீரத்துடன் போர்புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும். மன்னர்களுக்கு அமைக்கப்படுவதே பள்ளிப்படை என்றும், மற்றவர்களுக்காக அமைக்கப்படுவது நடுகல் என்பதும் சில ஆய்வாளர்களுடைய கருத்து. ஆனால் படைத் தளபதிகள், புலவர்கள் போன்றோர்க்கும் பள்ளிப்படைகள் அமைக்கப்படுவது உண்டு என்று வேறு சிலர் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.
கற்காலம் தொட்டே இறந்தவர்கள் நினைவாக கற்திட்டை , கற்பதுகை , குத்துக்கல் , கல்வட்டம் என்று வெவ்வேறு வடிவில் மூத்தோர் வழிபாடு இருந்து வந்த நிலையிலும் , அது கோவில் வடிவிலான வழிபாட்டு முறை சோழர்கள் காலத்தில் தான் எழுச்சி பெறுகிறது.
இதுவரை நமது தமிழகத்தில் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட சில பள்ளிப்படைகள் விவரம் பின் வருமாறு :
1 முதலாம் ஆதித்ய சோழன் - தொண்டைமானாடு
2 .அரிஞ்சயர் சோழன் - மேல்பாடி
3 .கங்க மன்னன் 'பிருத்துவீபதி' - திருப்புறம்பியம்
4 .பஞ்சவன் மாதேவி - பட்டீஸ்வரம்
5 . சுந்தர பாண்டியன் - பள்ளிமடம்
இப்பள்ளிப்படைகளில் காலத்தில் முந்தையது , முதலாம் ஆதித்தனின் தொண்டைமானாடு பள்ளிப்படையே. இது பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் பராந்தகனால் கட்டப்பட்டது ஆகும்.
அண்ணாமலையார் மூலவர் சமாதி அல்ல :
இடைக்காடர் சமாதி மீது தான் அண்ணாமலையார் லிங்கம் அமைந்து இருக்கிறது என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. ஏன் என்றால் பல்லவர்கள் வீழ்ந்து சோழர்கள் எழுச்சி பெரும் காலத்தில் தான் பள்ளிப்படைகள் எழுப்பப்படுகிறது. ஆனால் முதலாம் பள்ளிப்படையான் ஆதித்யன் பள்ளிப்படை கட்டுவதற்கு 200 வருடம் முன்னரே 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தரும் , அப்பரும் மிக தெளிவாக "அண்ணாமலையார்" என்று பதிவு செய்து உள்ளனர்.
மேலும் இந்த உலகமே அறிந்த ஒரு விசயம் அண்ணாமலையார் "சுயம்பு" லிங்கம் என்பது. இத்தலத்து லிங்க பானத்தின் காலத்தை கணிப்பது சற்று கடினமே. அப்படி இருக்க , சமாதியின் மீது லிங்கம் நிறுவப்பட்டுள்ளது என்று சொல்வது நகைப்புகுறியது.
முதல் மற்றும் இரண்டாம் பிரகாரம் :
கருவறைக்கு வட மேற்கு மூலையில் ஆறுமுகர் சந்நிதி அருகே உள்ள மூடப்பட்ட சதுர அறையில் இடைக்காடர் உடல் கிடத்தப்பட்டது என்றும் , மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மண்டபம் தான் "இடைக்காடர் சமாதி" என்றும் , அண்ணாமலையார் மூலவர் லிங்கமே "இடைக்காடர் சமாதி" மீது தான் அமைந்து உள்ளது என்றும் மூன்று வித முரணான கருத்துக்களும் ஆதாரமற்றது.
சுமார் 100 வருடங்கள் முன்னர் நடைபெற்ற நகரத்தார் திருப்பணியின் பொழுது கோவிலின் முதல் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் மிக பெரிய கட்டுமான மாற்றம் நடைபெற்று உள்ளது. கருவறையை முற்றிலுமாக பிரித்து மீண்டும் கட்டி உள்ளதற்கு அசைக்க முடியாத ஏராளமான சான்றுகள் உள்ளது. இன்றைய கருவறையின் அதிட்டானம் குமுத பட்டை வரை மட்டும் தான் பழைய கட்டுமானம் . குமுத பட்டை மேல் உள்ள யாழி வரிசையில் இருந்து கருவறை விமானம் வரை அனைத்தும் புதியதே . அதே போல் தான் இரண்டாம் பிரகாரமும் முற்றிலுமாக மாற்றி திருப்பணி செய்ய பட்டுள்ளது. எனவே சர்ச்சைக்குரிய அந்த சதுர பகுதி என்பது , சமீபத்தில் ஏற்படுத்த பட்டவையாகவே இருக்க கூடும்.
எதுவாகினும் , அதன் உளளே என்ன இருக்கிறது என்பதை துறை ரீதியாக ஆய்வு செய்து விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டியது அறநிலையத்துறையின் கடமையாகும். அப்பொழுது தான் பலரின் அனுமானங்களுக்கு விடை கிடைத்து சர்சைகளுக்கு முற்று புள்ளி வைக்க கூடும்.
மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மண்டபமும் காலத்தில் பிந்தியவை தான். அது விஜயநகர் /நாயக்கர் காலத்தியது.
ஆகவே , அண்ணாமலையார் கோவில் மூலவர் சமாதி மீது அமைந்தது அல்ல. கோவில் உருவான தினத்தில் இருந்து சைவத்தின் நிலமாக தான் இயங்கி வருகிறது. இது வரை இடைக்காடர் பற்றிய ஆதார பூர்வ சான்றுகள் எதுவும் இல்லாத நிலையில் , அண்ணாமலையார் கோவிலை "இடைக்காடர் " சமாதி என்று கோருவது அபத்தம். அவரின் பாடல்களை தாண்டி அவர் பிறப்பு/ இறப்பு சம்மந்தமான எந்த வித இலக்கியம் மற்றும் கல்வெட்டு சான்றும் இல்லாமல் வெறுமனே இடைக்காடர் சமாதி என்று கோருவது மிக தவறு.
திருவண்ணாமலை சைவ தலமே:
இடைக்காடர் சமாதி என்று கூறுவது போல , மேலும் ஒரு ஆதாரமற்ற தகவலை வைத்து திருவண்ணாமலை தலத்தை வைணவ தலமாக கோருவது மிக அபத்தம்.
இன்றைய பிரம்ம தீர்த்தத்திற்கு , முன்னாளில் "பெருமாள் தீர்த்தம் " என்று பெயர் இருந்ததற்கான சான்றுகள் இல்லாத பட்சத்தில் , புரவி மண்டப விதான "ராமாயண" ஓவியங்களை வைத்து இது வைணவ தலமாக இருந்து சைவ தலமாக மாற்றப்பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகமும் மிக தவறு.
விஜயநகர மற்றும் நாயக்கர்கள் வைணவத்தை பின்பற்றியவர்கள் என்பதால் அவர்கள் காலத்தில் பெரும்பாலும் வைணவம் சார்ந்த ஓவியங்களையே அணைத்து கோவில்களிலும் வரைந்து வந்துள்ளனர். அது போல தான் இங்கும் ராமாயண ஓவியங்கள் வரைந்து உள்ளனர். அதே விஜயநகர காலத்தில் தான் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் சிவ ரூபங்கள் அடங்கிய பல ஓவியங்கள் வரைய பட்டு உள்ளது.
இங்கு மூலவருக்கு பின்னால் உள்ள வேணுகோபாலர் சந்நிதி பெரும் சர்சைக்கு உள்ளான ஒன்று என்பதில் ஐயம் இல்லை. வேணுகோபாலரே சில நூற்றாண்டுகள் முன்னர் தான் கோவிலுக்குள் நுழைந்தார் என்ற உறுதிப்படுத்தாத தகவலும் உண்டு. ஏழாம் நூற்றாண்டு முதல் சைவத்தின் பீடமாக திகழ்ந்ததற்கு எல்லா ஆதாரங்கள் இருந்தும் , எந்த ஆழமான ஆதாரமும் இன்றி இதனை வைணவ தலமாக இருந்திருக்கலாம் என்று கற்பனையில் கூறுவது ஏற்று கொள்ள இயலாத ஒன்று. எதுவாகினும் வேணுகோபாலர் குறித்து ஆய்வுகள் நடத்த படவேண்டும். எக்காலகத்தில் , எக் காரணத்திற்காக வேணுகோபாலர் உள்ளே நுழைந்தார் என்பது ஆராய பட்டால் தான் உண்மை வெளி கொணர முடியும்.
அதேபோல பிரெஞ்ச் ஆவணங்களில் கூறபட்டுள்ள விக்கரமபாண்டீஸ்வரர் இருக்கும் இடத்தில் , கட்டுரையில் கூறபட்டுள்ளது போல எந்த ஆஞ்சநேயர் சிலையும் இன்று இல்லை. எனவே இல்லாத ஒரு சிலையை இருக்கிறது என்று கூறுவதில் மிக பெரிய முரணும் சந்தேகமும் எழுகிறது.
இப்படி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் , அனுமானத்தில் சிலர் கூறும் கருத்தை கொண்டு ஆதார பூர்வத்துடன் பல நூற்றாண்டுகளாக இயங்கி கொண்டு இருக்கும் மிக பெரிய சைவ தலத்தின் புனித தன்மையை கெடுப்பது ஏற்று கொள்ளப்பட முடியாத விஷயம்.
திருவண்ணாமலை கோவில் இன்று உலக அளவில் பிரசித்தி பெற்று , பல லட்சம் பக்தர்களை ஈர்த்து கொண்டு இருக்கும் பட்சத்தில் , இது போன்ற ஆதாரமற்ற செய்திகளால் அண்ணாமலையாரின் பக்தர்கள் மனம் புண்படுகிறது. அண்ணாமலையார் கோவில் சாதி , மதம் , கலாச்சாரம் கடந்து உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவான கோவில். இதனை தனி நபரோ ,இல்லை குழுவோ தங்களுக்கு சாதகமா பயன்படுத்த நினைப்பதை அந்த அண்ணாமலையார் கூட மன்னிக்க மாட்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் இன்று உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் சைவ தலமாகும். இத்தலம் பஞ்ச பூத தலதங்களில் அக்னி தலமாகவும் , ஆதார தலங்களில் மணிப்பூரக தலமாகவும் , முக்தி தலங்களில் "நினைத்தாலே முக்தி" தரும் தலமாகவும் விளங்குவதே இதன் சிறப்பு என்றாலும் , மேலும் மிக முக்கிய காரணம் இக்கற்றளி தன்னகத்தே நீண்ட நெடிய வரலாற்றை புதைத்து வைத்துள்ளதே ஆகும்.
சமீப காலமாக , அண்ணாமலையாரின் பெயருக்கு ஊரு விளைவிக்கும் வன்னமாக பல குழுக்கள் சுயலாபம் தேட பல கட்டுக்கதைகளை மக்களிடம் அவிழ்த்துவிட்டு முகம் சுளிக்கும் வன்னம் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இணையத்திலும் , சமூக வலைத்தளத்திலும் ஆதாரமற்ற கதை ஒன்று , திருவண்ணாமலை கோவிலின் பெரிய நந்தியை வைத்து உலாவியது. அது அடங்கிய சில நாட்களிலே , அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவர் "இடைக்காட்டு" சித்தர் சமாதி மீது அமைந்து உள்ளது என்று அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
நாளுக்கு நாள் இதுபோன்று பல தவறான செய்திகள் பல உலா வருவதால் , மனமாற அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்கள் அறியாமையின் பால் பலி ஆகியதன் விளைவே , இன்று கிரிவல பாதை முழுவதும் புது புது ஆசிரமங்களும் , ஆக்கிரமிப்புகளும் முளைக்க காரணம். இருபது வருடங்கள் முன்னர் இருந்த எழில் கொஞ்சும் கிரிவல பாதைக்கும் இன்று இருக்கும் பாதைக்கும் பல மாற்றங்கள். இன்று திருவண்ணாமைலையை சேர்ந்த ஒரு நபர் வெளியூரில் சென்று ஊர் பெயரை சொன்னால் மக்கள் முதலில் விசாரிப்பது அண்ணாமலையாரை பற்றி அல்ல , மாறாக "உங்கள் ஊரில் நிறைய சித்தர்கள் இருக்கிறார்களாமே " என்பது தான். நாளுக்கு நாள் அண்ணாமலையாரின் பெயர் மெல்லமாக தேய்ந்து , திருவண்ணாமலையின் அடையாளமாக இந்த கிரிவல பாதை சித்தர்கள் உரு எடுத்து வருன்றனர்.
அண்ணாமலையார் கோவிலின் தோற்றம் :
உலக பிரசத்தி பெற்ற இக்கோயில் கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் இயங்கி வருவதற்கு நமக்கு இலக்கிய சான்றுகள் கிடைத்தாலும் , அண்ணாமலையார் கோவிலில் பதிவாகியுள்ள முதல் கல்வெட்டு சான்றாக கி .பி 885 ஆம் வருடத்திய கல்வெட்டே ஆகும். இது முதலாம் ஆதித்தனின் பதினான்காம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு. இதன் பின்னர் வந்த பராந்தக சோழர் , கன்னர தேவர் , ராஜ ராஜ சோழரின் அண்ணன் ஆதித்ய கரிகாலன் என்று வரிசையாக ஆண்ட சோழ மற்றும் ஹொய்சாள , பாண்டிய , விஜயநகர , நாயக்கர் காலத்திய ஏராளமான கல்வெட்டுகள் அடங்கி மிக பெரிய தகவல் களஞ்சியமாக இக்கோயில் விளங்குகிறது. தமிழ் மற்றும் அல்லாது தெுலுங்கு கல்வெட்டுக்களும் ஏராளம்.
இலக்கிய சான்றாக நமக்கு கிடைப்பவை திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் காலத்தில் பாட பெற்ற பதிகங்கள் தான் . கோவில் ஏழாம் நூற்றாண்டிலே இருந்தமையை உறுதி படுத்த இப்பதிகங்களே துணை.
மூலவர் அண்ணாமலையாரே :
சீர்காழி பதி தோன்றிய திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். இவர்கள் பல தலங்களில் உள்ள இறைனை தரிசித்து பதிகங்களாக பாடியுள்ளனர். சேக்கிழார் அவர்கள் இவற்றை எல்லாம் திருமுறைகளாக தொகுத்து உள்ளார். அதில் முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்மந்தர் பாடல்களும் , அடுத்த மூன்று அப்பர் பாடல்கள் என்று வரிசைபடுத்தியுள்ளார்.
முதலாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் அவர்கள் திருவண்ணாமலை வந்தடைந்து இங்கே வீற்றிருக்கும் ஈசனை பின்வருமாறு பாடுகிறார்.
"உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே"
இது மட்டும் அல்லாது அவர் பாடிய 20 பாடல்களிலும் "அண்ணாமலை" என்றே குறிப்பிடுகிறார். இதன் மூலம் சம்பந்தர் காலத்திலே இறைவனை அவர் "அண்ணாமலையார்" என்று குறிப்பிடுவது மிக தெளிவாக பதிவாகியுள்ளது.
இதை போல அப்பர் பெருமானும் , தனது பதிகங்களில் இத்தல இறைவனை "அண்ணாமலை" என்றே பதிவு செய்து உள்ளார்.
ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.
இவறுக்கு பின்னால் வந்த மாணிக்கவாசக பெருமானும் திருவண்ணாமலையில் திருவம்மானையும் திருவெம்பாவையும் அருளி செய்து , தனது "போற்றி திரு அகவலில் " இத் தலத்து உறையும் இறைவனை அண்ணாமலை என்றே பதிவு செய்து இருக்கிறார்.
அண்ணா மலையெம் அண்ணா போற்றி
இப்படி அண்ணாமலையார் என்ற பெயர் ஏழாம் நூற்றாண்டு முதலே வழங்கப்பட்டு இன்றுவரை வழக்கில் இருந்து வருகிறது.
பள்ளிப்படை :
பள்ளிப்படை என்பது வீரத்துடன் போர்புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும். மன்னர்களுக்கு அமைக்கப்படுவதே பள்ளிப்படை என்றும், மற்றவர்களுக்காக அமைக்கப்படுவது நடுகல் என்பதும் சில ஆய்வாளர்களுடைய கருத்து. ஆனால் படைத் தளபதிகள், புலவர்கள் போன்றோர்க்கும் பள்ளிப்படைகள் அமைக்கப்படுவது உண்டு என்று வேறு சிலர் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.
கற்காலம் தொட்டே இறந்தவர்கள் நினைவாக கற்திட்டை , கற்பதுகை , குத்துக்கல் , கல்வட்டம் என்று வெவ்வேறு வடிவில் மூத்தோர் வழிபாடு இருந்து வந்த நிலையிலும் , அது கோவில் வடிவிலான வழிபாட்டு முறை சோழர்கள் காலத்தில் தான் எழுச்சி பெறுகிறது.
இதுவரை நமது தமிழகத்தில் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட சில பள்ளிப்படைகள் விவரம் பின் வருமாறு :
1 முதலாம் ஆதித்ய சோழன் - தொண்டைமானாடு
2 .அரிஞ்சயர் சோழன் - மேல்பாடி
3 .கங்க மன்னன் 'பிருத்துவீபதி' - திருப்புறம்பியம்
4 .பஞ்சவன் மாதேவி - பட்டீஸ்வரம்
5 . சுந்தர பாண்டியன் - பள்ளிமடம்
இப்பள்ளிப்படைகளில் காலத்தில் முந்தையது , முதலாம் ஆதித்தனின் தொண்டைமானாடு பள்ளிப்படையே. இது பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் பராந்தகனால் கட்டப்பட்டது ஆகும்.
அண்ணாமலையார் மூலவர் சமாதி அல்ல :
இடைக்காடர் சமாதி மீது தான் அண்ணாமலையார் லிங்கம் அமைந்து இருக்கிறது என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. ஏன் என்றால் பல்லவர்கள் வீழ்ந்து சோழர்கள் எழுச்சி பெரும் காலத்தில் தான் பள்ளிப்படைகள் எழுப்பப்படுகிறது. ஆனால் முதலாம் பள்ளிப்படையான் ஆதித்யன் பள்ளிப்படை கட்டுவதற்கு 200 வருடம் முன்னரே 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தரும் , அப்பரும் மிக தெளிவாக "அண்ணாமலையார்" என்று பதிவு செய்து உள்ளனர்.
மேலும் இந்த உலகமே அறிந்த ஒரு விசயம் அண்ணாமலையார் "சுயம்பு" லிங்கம் என்பது. இத்தலத்து லிங்க பானத்தின் காலத்தை கணிப்பது சற்று கடினமே. அப்படி இருக்க , சமாதியின் மீது லிங்கம் நிறுவப்பட்டுள்ளது என்று சொல்வது நகைப்புகுறியது.
முதல் மற்றும் இரண்டாம் பிரகாரம் :
கருவறைக்கு வட மேற்கு மூலையில் ஆறுமுகர் சந்நிதி அருகே உள்ள மூடப்பட்ட சதுர அறையில் இடைக்காடர் உடல் கிடத்தப்பட்டது என்றும் , மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மண்டபம் தான் "இடைக்காடர் சமாதி" என்றும் , அண்ணாமலையார் மூலவர் லிங்கமே "இடைக்காடர் சமாதி" மீது தான் அமைந்து உள்ளது என்றும் மூன்று வித முரணான கருத்துக்களும் ஆதாரமற்றது.
சுமார் 100 வருடங்கள் முன்னர் நடைபெற்ற நகரத்தார் திருப்பணியின் பொழுது கோவிலின் முதல் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் மிக பெரிய கட்டுமான மாற்றம் நடைபெற்று உள்ளது. கருவறையை முற்றிலுமாக பிரித்து மீண்டும் கட்டி உள்ளதற்கு அசைக்க முடியாத ஏராளமான சான்றுகள் உள்ளது. இன்றைய கருவறையின் அதிட்டானம் குமுத பட்டை வரை மட்டும் தான் பழைய கட்டுமானம் . குமுத பட்டை மேல் உள்ள யாழி வரிசையில் இருந்து கருவறை விமானம் வரை அனைத்தும் புதியதே . அதே போல் தான் இரண்டாம் பிரகாரமும் முற்றிலுமாக மாற்றி திருப்பணி செய்ய பட்டுள்ளது. எனவே சர்ச்சைக்குரிய அந்த சதுர பகுதி என்பது , சமீபத்தில் ஏற்படுத்த பட்டவையாகவே இருக்க கூடும்.
எதுவாகினும் , அதன் உளளே என்ன இருக்கிறது என்பதை துறை ரீதியாக ஆய்வு செய்து விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டியது அறநிலையத்துறையின் கடமையாகும். அப்பொழுது தான் பலரின் அனுமானங்களுக்கு விடை கிடைத்து சர்சைகளுக்கு முற்று புள்ளி வைக்க கூடும்.
மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மண்டபமும் காலத்தில் பிந்தியவை தான். அது விஜயநகர் /நாயக்கர் காலத்தியது.
ஆகவே , அண்ணாமலையார் கோவில் மூலவர் சமாதி மீது அமைந்தது அல்ல. கோவில் உருவான தினத்தில் இருந்து சைவத்தின் நிலமாக தான் இயங்கி வருகிறது. இது வரை இடைக்காடர் பற்றிய ஆதார பூர்வ சான்றுகள் எதுவும் இல்லாத நிலையில் , அண்ணாமலையார் கோவிலை "இடைக்காடர் " சமாதி என்று கோருவது அபத்தம். அவரின் பாடல்களை தாண்டி அவர் பிறப்பு/ இறப்பு சம்மந்தமான எந்த வித இலக்கியம் மற்றும் கல்வெட்டு சான்றும் இல்லாமல் வெறுமனே இடைக்காடர் சமாதி என்று கோருவது மிக தவறு.
திருவண்ணாமலை சைவ தலமே:
இடைக்காடர் சமாதி என்று கூறுவது போல , மேலும் ஒரு ஆதாரமற்ற தகவலை வைத்து திருவண்ணாமலை தலத்தை வைணவ தலமாக கோருவது மிக அபத்தம்.
இன்றைய பிரம்ம தீர்த்தத்திற்கு , முன்னாளில் "பெருமாள் தீர்த்தம் " என்று பெயர் இருந்ததற்கான சான்றுகள் இல்லாத பட்சத்தில் , புரவி மண்டப விதான "ராமாயண" ஓவியங்களை வைத்து இது வைணவ தலமாக இருந்து சைவ தலமாக மாற்றப்பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகமும் மிக தவறு.
விஜயநகர மற்றும் நாயக்கர்கள் வைணவத்தை பின்பற்றியவர்கள் என்பதால் அவர்கள் காலத்தில் பெரும்பாலும் வைணவம் சார்ந்த ஓவியங்களையே அணைத்து கோவில்களிலும் வரைந்து வந்துள்ளனர். அது போல தான் இங்கும் ராமாயண ஓவியங்கள் வரைந்து உள்ளனர். அதே விஜயநகர காலத்தில் தான் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் சிவ ரூபங்கள் அடங்கிய பல ஓவியங்கள் வரைய பட்டு உள்ளது.
இங்கு மூலவருக்கு பின்னால் உள்ள வேணுகோபாலர் சந்நிதி பெரும் சர்சைக்கு உள்ளான ஒன்று என்பதில் ஐயம் இல்லை. வேணுகோபாலரே சில நூற்றாண்டுகள் முன்னர் தான் கோவிலுக்குள் நுழைந்தார் என்ற உறுதிப்படுத்தாத தகவலும் உண்டு. ஏழாம் நூற்றாண்டு முதல் சைவத்தின் பீடமாக திகழ்ந்ததற்கு எல்லா ஆதாரங்கள் இருந்தும் , எந்த ஆழமான ஆதாரமும் இன்றி இதனை வைணவ தலமாக இருந்திருக்கலாம் என்று கற்பனையில் கூறுவது ஏற்று கொள்ள இயலாத ஒன்று. எதுவாகினும் வேணுகோபாலர் குறித்து ஆய்வுகள் நடத்த படவேண்டும். எக்காலகத்தில் , எக் காரணத்திற்காக வேணுகோபாலர் உள்ளே நுழைந்தார் என்பது ஆராய பட்டால் தான் உண்மை வெளி கொணர முடியும்.
அதேபோல பிரெஞ்ச் ஆவணங்களில் கூறபட்டுள்ள விக்கரமபாண்டீஸ்வரர் இருக்கும் இடத்தில் , கட்டுரையில் கூறபட்டுள்ளது போல எந்த ஆஞ்சநேயர் சிலையும் இன்று இல்லை. எனவே இல்லாத ஒரு சிலையை இருக்கிறது என்று கூறுவதில் மிக பெரிய முரணும் சந்தேகமும் எழுகிறது.
இப்படி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் , அனுமானத்தில் சிலர் கூறும் கருத்தை கொண்டு ஆதார பூர்வத்துடன் பல நூற்றாண்டுகளாக இயங்கி கொண்டு இருக்கும் மிக பெரிய சைவ தலத்தின் புனித தன்மையை கெடுப்பது ஏற்று கொள்ளப்பட முடியாத விஷயம்.
திருவண்ணாமலை கோவில் இன்று உலக அளவில் பிரசித்தி பெற்று , பல லட்சம் பக்தர்களை ஈர்த்து கொண்டு இருக்கும் பட்சத்தில் , இது போன்ற ஆதாரமற்ற செய்திகளால் அண்ணாமலையாரின் பக்தர்கள் மனம் புண்படுகிறது. அண்ணாமலையார் கோவில் சாதி , மதம் , கலாச்சாரம் கடந்து உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவான கோவில். இதனை தனி நபரோ ,இல்லை குழுவோ தங்களுக்கு சாதகமா பயன்படுத்த நினைப்பதை அந்த அண்ணாமலையார் கூட மன்னிக்க மாட்டார்.